Saturday, 5 January 2019

பாரதியார் வாழ்க்கையின் வரலாறு

                    மகாகவி   பாரதியார்
        

                   
                பிறந்த -  டிசம்பர் 11,1882

                     பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

                   மற்ற பெயர்கள்- முண்டாசுக் கவிஞன், சக்தி தாசன்,                                                              பாரதியார், மகாகவி


                                இருப்பிடம்- திருவல்லிக்கேணி, சென்னை

                       துணைவியார் - செல்லம்மாள்
                                                 பெயர்

                               பெற்றோர்- சின்னசாமி சுப்ரமணிய ஐயர் , லட்சுமி அம்மாள்

                                பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

                                 இறப்பு: செப்டம்பர் 11, 1921
                                 
                                  நாட்டுரிமை: இந்தியா


இளமைப் பருவம்

                                சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்தார். அவரது பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், அவரது கவிதைலமை பாராட்டிய எடயபுர மன்னர், இவருக்கு "பாரதி" என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் அவர் "சுப்பிரமணிய பாரதியார்" என்று அழைப்பெற்றார். .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

                                   பாரதியியார் அவர்கள், பள்ளியில் படித்துக்கொண்டுள்ளார் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்றுவரை திருமணம் செய்துகொண்டார். அவரது தந்தையின் இறப்புக்கு பிறகு பாரதியார் வறுமை நிலைநனை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தது. பின்னர் எட்டையபுரா மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்

பாரதியார் கற்ற மொழிகள்


                        பாரதியார் கற்ற மொழிகள் 16 வயதில் தன் தந்தையையும் இழந்த பாரதியார் அதன் பிறகு வறுமையில் வடித் தவித்தார். பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு காசிக்கு சென்றஅலகாபாத் எப்படியோ கழகத்தில் சம்ஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் கற்றறிந்த. இது தவிர ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழிகளிலும் தனிப் புலமை பெற்று விளங்கினார் பாரதியார். இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால் தான், “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தெளிவாக சொன்னார் மகா கவி பாரதியார்.

இந்திய விடுதைலை போராட்டத்தில் பாரதியார் ஆற்றிய பணி  

                         தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 1905 ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார் மகாகவி பாரதியார். அதன் பிறகு காட்டினார் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்றோரோடு நெருங்கிய தொடர்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிக்கா தேவியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார், அவரை தம் ஞயான குருவாக ஏற்றுக்கொண்டார்.

                       1907 ஆம் ஆண்டில் “இந்தியா” என்னும் வார ஏட்டையும் “பால பாரதம்” என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார் பாரதியார். இந்தியா விடுதலை போராட்டத்தில் பாரதியார் பாரதியார். ஈடுபட துவங்கினார். தாம் ஆசிரியராக இருந்த இந்தியா என்னும் பத்திரிகையை விடுதலைக்காக பயன்படுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில், பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறுகொள்ள செய்தது. 
                             "கத்தியின்றி ரத்தமின்றி 
                               யுத்தமொன்று வருகுது
                               சத்தியத்தின் நித்தியத்தை
                               நம்பும்யாரும் சேருவீர் என்று நெருப்பு கனலாய் கொந்தளித்தார் மகாகவி பாரதியார்.

புதுவையில் பாரதியாரின் கவிதை 


                          பத்திரிக்கை முடங்கியதே தவிர பாரதியாரின் புலமை முடங்கவில்லை. அந்த காலகட்டத்தில் தான், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் போன்ற அமர பாட்டு, பலவற்றை இயற்றினார் பாரதியார். அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார் பாரதியார்.


பாரதியார் இறப்பு

             1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதியார். அங்கு யாரும் எதிர்பாரா விதமாக அந்த அங்கு யானை அவரை தூக்கி எரிந்தது. அதனால் தலையிலும் கையிலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. அதோடு அவருக்கு இது ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. அதனால்  அவர் நோய்வாய்ப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டபோதும் வயிற்று கடுப்பு நோயால் பாதிக்கப்  பட்டார். மருந்துகளை சாப்பிட மறுத்த அவர் தனது 39 வது வயதில், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இவுலக வாழ்வை நீத்தார். 



                            " இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை
                          இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே,
                          மகாகவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ!
                         அவன் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட
                              ஆட்கள் இல்லையே!” என்று குறிப்புபிட்டுள்ளார்.

1 comment:

  1. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது ... இது நாமக்கல் கவிஞரின் வரிகள்..
    திருத்திக்கொள்ளவும்

    ReplyDelete